20,Apr 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டமை உண்மை! சமாதானம் மலரவில்லை - த.சித்தார்த்தன்

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் தமிழ் தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமாக எதுவுமே கூறப்படவில்லை, அத்துடன் வடக்கு, கிழக்க மக்கள் பிரதிநிதிகள் தமது கொள்கைகளை ஓரங்கட்டிவிட்டு தனது செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே இவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,  எமது கொள்கைகள் என்பது எமது மக்களின் அபிலாசைகளை சுதந்திரம் பெற்ற நாள் தொடக்கம் சமஷ்டி முறையிலான நியாயமான தீர்வு என்பதனை தெளிவாக கூறிவந்திருக்கின்றார்கள். அதனை ஓரங்கட்டிவிட்டு அபிவிருத்தி செய்வதில் எந்த பயனுமில்லை.

தற்போது இந்த நாட்டில் பெருளாதார பின்னடைவுக்கு கோவிட் காரணமாக உள்ளது. இதனை நாங்கள் மறுக்க முடியாது. அதனை விட முக்கியமாக எமது மக்களின் இனப்பிரச்சினையும், அதனால் ஏற்பட்ட யுத்தம் மற்றும் இழப்புக்களும் எமது பிரச்சினைக்குத் தீர்வை எட்டாது நாடு நிலைபேறான அபிவிருத்தியை அடைய முடியாது.

எனவே நியாயமான தீர்வை காணுவதை தான் முக்கியமானதாக கொள்ள வேண்டும். ஜனாதிபதியின் உரையில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு சமாதானம் மலர்ந்ததாக கூறியிருந்தார்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது உண்மை ஆனால் சமாதானம் மலரவில்லை. யுத்தம் ஆரம்பித்ததற்கான காணிகள் அதே நிலையில் தான் உள்ளது. அந்த காணிகளுக்கு சரியான தீர்வு கொண்டு வராமல் சமாதனம் மலர்ந்ததாக கூறமுடியாது.

யுத்தம் மிகப்பெரிய அழிவை எமது பகுதிகளில் ஏற்படுத்தியுள்ளது. இதனை நிவர்த்தி செய்ய பாரிய அபிவிருத்திகளை எமது பகுதிகளில் செய்ய வேண்டியுள்ளது. இதனை கொழுப்பில் இருந்து திட்டமிடுவதனுடாக அந்த அபிவிருத்தி எமது மக்களுக்கு பயனைப் பெற்றுக் கொடுக்க முடியாது.





யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டமை உண்மை! சமாதானம் மலரவில்லை - த.சித்தார்த்தன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு