ஒமிக்ரோன் தொற்று இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் திரிபாக மாறி வருவதால், நாட்டில் பாரிய கோவிட் பரவலை தவிர்ப்பதற்கு பொது மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்கான முக்கியத்துவத்தை சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து கோவிட்-19 ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி கூறுகையில்,இந்த முக்கியமான தருணத்தில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் தங்கள் இயக்கத்தை கட்டுப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
"கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையின் திடீர் அதிகரிப்பு, ஒமிக்ரோன் நாட்டில் வேகமாக பரவி வருவதைக் குறிக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய நிலைமை எதிர்காலத்தில் ஒரு பெரிய நோய் பரவலின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, மக்கள் தங்களைத் தாங்களே முன்னிறுத்துவது கட்டாயமாகும், ”என்று அவர் வலியுறுத்தினார்.
"மக்கள் செய்ய வேண்டிய இரண்டு விஷயங்கள், முகக்கவசங்களை சரியாக அணிந்து, விரைவில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வைத்தியர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
31 வீதமானோர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுள்ளனர், இது மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும், பல்வேறு கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துகள் காரணமாக பூஸ்டரைப் பெறுவதில் மக்கள் சிறிது தயக்கம் காட்டுவதாகவும் அவர் கூறினார்.
"இருப்பினும், மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்கத் தவறினால் மற்றும் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தவறினால், ஒமிக்ரோன் பரவலை தவிர்க்க முடியாதது" என்று வைத்தியர் ஹம்தானி எச்சரித்தார்
0 Comments
No Comments Here ..