அரச தலைவர் கூறும் சுபீட்சம் மக்களுக்கானதல்ல அது ராஜபக்ஸ சகோதரர்களுக்கும் அவர்களை சுற்றியுள்ள ராஜ தோழர்களுக்குமான சுபீட்சம் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் (Imran Maharoof) தெரிவித்தார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை மீதான உரை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ,
"நாட்டின் இக்கட்டான சூழ்நிலையில் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து நாடாளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைத்த அரச தலைவர் தனது கொள்கை அறிக்கையில் ஏன் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தார் என்பதை தெளிவுபடுத்துவார் என எதிர்பார்த்தால் அவர் தனது பழையே கதைகளையே மீண்டும் கூறி சென்றார்.
அவரின் உரை யானை விழுங்கிய விளாம்பழம் போன்றே இருந்தது. அதில் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை.
0 Comments
No Comments Here ..