09,Jul 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - வாசுதேவ நாணயக்கார

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு கோடி ரூபாவுக்கு அதிக நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு தவறியுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara) தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பான தகவல்களை வழங்குமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - வாசுதேவ நாணயக்கார

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு