03,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

யாழ்ப்பாணம் - நெல்லியடியில் மாணவி தற்கொலை

யாழ்ப்பாணம் - நெல்லியடி காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட கரணவாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த 12 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்றிரவு (23) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

7ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.





யாழ்ப்பாணம் - நெல்லியடியில் மாணவி தற்கொலை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு