27,Apr 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

எந்தவித குற்றசாட்டுமின்றி சிறையில் இருக்கும் கைதிகள்! - சுமந்திரன் எம்.பி

ஈஸ்டர் குண்டு தாக்குதல் குற்றச்சாட்டு தொடர்பில் 300 இற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு எந்தவித குற்றச்சாட்டுமின்றி சிறையில் இருக்கிறார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் கையெழுத்துப் போராட்டம் வவுனியாவில் இன்று (28.02) இடம்பெற்ற நிலையில் அங்கு வருகை தந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்துப் போராட்டம் வவுனியா மாவட்டத்திலும் ஆரம்பமாகிறது. மக்கள் மிகுந்த ஆர்வமாக இந்த கையெழுத்துப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

தங்களுக்கும் இதில் பங்கு இருக்கின்றது என்ற பொறுப்புணர்வுடன், பல இடங்களில் ஏன் தமது இடங்களுக்கு வரவில்லை என அழைத்து கேட்கிறார்கள்.

இது ஒரு மக்கள் போராட்டமாக இருக்கிறது. தமிழ் பகுதிகளில் இந்தப் போராட்த்திற்கு அதிக வரவேற்பு இருக்கிறது. ஏனெனில் தமிழ் இளைஞர்கள் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள்.

1988, 1989 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இது சிங்கள இளைஞர்களையும் மோசமாக பாதித்து இருக்கிறது. ஜேவிபி தலைவர் இதில் கையொப்பம் இட்டார்.





எந்தவித குற்றசாட்டுமின்றி சிறையில் இருக்கும் கைதிகள்! - சுமந்திரன் எம்.பி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு