முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உடையார்கட்டு பகுதியில் வெள்ளப்பள்ளம் குளம் தனியார் ஒருவரினால் ஆக்கிரமிக்கப்பட்டு எல்லையிடப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு அக்கிராம மக்களினால் தெரிவிக்கப்பட்டதன் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்று இது தொடர்பாக சம்மந்தப்பட்ட திணைக்களங்கள அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உடனடியாக குளத்தை எல்லையிடப்படுவதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
கமநல சேவை திணைக்களத்தினரால் எல்லையிடப்பட்ட குளத்தை தனியார் ஆக்கிரமிப்பதனால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்ளவதை நேரடியாக அப்பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்
சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் அசமந்த போக்காக உள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..