05,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

நாளை நல்லிரவு அமுலுக்கு வரும் எரிபொருள் அதிகரிப்பு கோட்டா

அதனடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வாடகை முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டா 22 லீற்றராகவும், ஏனைய முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டா 14 லீற்றராகவும், மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் கோட்டா 14 லீற்றாராகவும், கார்களுக்கான எரிபொருள் கோட்டா 40 லீற்றராகவும், பஸ்களுக்கு வாரத்திற்கு எரிபொருள் கோட்டா 125 லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்


மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கருத்து தெரிவிக்கையில், ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் புத்தாண்டின் போது எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்தோம்.

இருப்பினும் குறித்த எரிபொருள் ஒதுக்கீட்டு அதிகரிப்பு எமது வெளிநாட்டு கையிருப்பில் பாரியதொரு தாக்கத்தை செலுத்தவில்லை. இதனை மேலும் அதிகரிக்க முடியுமா? என ஆராயுமாறு ஜனாதிபதி தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தார்.


அதற்கமைவாக, அடுத்த மாதம் முதல் எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க முடியும். எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைவாக ஒதுக்கீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது என்றார். இந்நிலையில் அமைச்சரினால் தற்போது எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில், நாளை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் உரிய திருத்தம் அமுலுக்கு வரும் என குறிப்பிட்டுள்ளார். அதன்படி பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு வாரத்திற்கு 22 லீற்றராகவும்,





நாளை நல்லிரவு அமுலுக்கு வரும் எரிபொருள் அதிகரிப்பு கோட்டா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு