18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

நாளை நடைபெறும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் 10 கைதிகள்

இதனை சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் ஐவர் வட்டரக சிறைச்சாலை கைதிகளாவர்.

ஏனைய ஐவரும் வெலிக்கடை சிறைச்சாலைக் கைதிகள் என மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.

இந்த கைதிகள் 10 பேரும் குறித்த இரண்டு சிறைச்சாலைகளிலும் நிறுவப்பட்டுள்ள நிலையங்களிலேயே இந்தப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக அவர் கூறினார்.

இந்த 10 பேரில் ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரும் அடங்குவதாக சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.





நாளை நடைபெறும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் 10 கைதிகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு