கிழக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்றுள்ள இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தொலைபேசியூடாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வாழ்த்து தெரிவித்தமைக்காக முதலமைச்சருக்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்ததுடன், கலைஞர் மு. கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு பல உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டன.
அவற்றை நினைவூட்டும் வகையில், கலைஞரின் நூற்றாண்டு விழாவை இலங்கையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..