01,May 2024 (Wed)
  
CH
சமையல்

வடை மோர் குழம்பு செய்வது எப்படி

மெதுவடை அல்லது பருப்பு வடை - 10 

தயிர் - 2 கப் 

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன் 

பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன் 

கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு ஊறவைத்து நைசாக அரைக்க : அரிசி - 1 ஸ்பூன் துவரம் பருப்பு - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் - 3 சீரகம் - 1 ஸ்பூன் கொரகொரப்பாக அரைக்க :

வெங்காயம் - 1 தக்காளி - 1 பூண்டு - 5 பல் இஞ்சி - சிறிது துண்டு தாளிக்க : எண்ணெய் - 2 ஸ்பூன் கடுகு - கால் ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 


செய்முறை : 


அரிசி, துவரம் பருப்பை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும். 

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

* தக்காளி, வெங்காயம், இஞ்சியை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். 


* ஊறவைத்த அரிசி, துவரம் பருப்புடன், சீரகம், ப.மிளகாய் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். 

* ஒரு பாத்திரத்தில் தயிர், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், 2 கப் தண்ணீர், அரைத்த அரிசி விழுது, உப்பு சேர்த்து நன்றாக கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும். 


* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் கொரகொரப்பாக அரைத்த விழுதை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.

 

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் கரைத்து வைத்துள்ள தயிர் கலவையை ஊற்றி கொதிக்க விடவும். 

* கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வடைகளை போடவும். வடைகளை போட்டவுடன் அடுப்பை அணைத்து விடவும். 

* கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும். * சூப்பரான வடை மோர் குழம்பு ரெடி. 







வடை மோர் குழம்பு செய்வது எப்படி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு