கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இன்று புதன்கிழமை (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற வீதியில் காரில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரோயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
காயமடைந்த நபருடன் மேலும் இருவர்கனகபுரம் பகுதிக்கு காரில் சென்றிருந்த போது வேறு ஒரு தரப்பினருடன் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து மோட்டாா் சைக்களில் பிரவேசித்த இருவர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸாா் முன்னெடுத்த விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..