18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

மன்னார் தோட்டவெளி பகுதியில் தீ பற்றி எரிந்த குடிசை வீட்டிற்கு தமிழரசு கட்சி உதவி


குறித்த குடும்பம் மிகவும் வறுமை பட்ட நிலையில் வாழ்ந்து வந்ததுடன் 7 மற்றும் 9 ஆம் தரத்தில் கற்கும் இரு பிள்ளைகள் உட்பட அக் குடும்பத்தினர் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் எரிந்த வீட்டை கூட சரிபடுத்த முடியாத நிலையில் பலரிடம் உதவி கோரியிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த கோரிக்கையை ஏற்று மன்னார் தமிழரசு கட்சியின் கிளை தலைவரும் சட்டத்தரணியுமான S. டினேஸனின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த குடும்பத்தின் வீட்டின் கூரை அமைப்பதற்கு உதவிகள் வழங்கப்பட்டது.

மன்னார் தமிழரசு கட்சியின் கிளை உறுப்பினர்கள் இணைந்து மேற்கூரை அமைப்பதற்கான பொருட்களை அக் குடும்பத்திற்கு நேற்று (04) வழங்கி வைத்தனர்.

அதேநேரம் குறித்த குடும்பத்தினர் இவ் பொருளாதார நெருக்கடி காரணமாக மிகவும் வறுமையில் வாடுவதால் உதவ முடிந்தவர்கள் குறித்த குடும்பத்திற்கான மேலதிக உதவிகளை வழங்குமாறு கோரிக்கை

விடுத்துள்ளனர்




மன்னார் தோட்டவெளி பகுதியில் தீ பற்றி எரிந்த குடிசை வீட்டிற்கு தமிழரசு கட்சி உதவி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு