20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

கிளிநொச்சியில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் ரங்கன் குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைகள் மக்கள் குடியிருப்புகளுக்குள் நுழைந்து அச்சுறுத்தி வருகிறது.


மேலும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து வருவதுடன், உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தி வருகிறது. 

இது தொடர்பாக பல தடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்த போதிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.




கிளிநொச்சியில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு