20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட பெண்ணை வெளிநாட்டுப் பரிசோதனைகளுக்கு அனுப்ப தீர்மானம்

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டதாக அடையாளங் காணப்பட்ட சீனப் பெண்ணை, மேலதிக பரிசோதனைகளுக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

43 வயதையுடைய குறித்த சீனப் பெண், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டதாக நேற்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டது.

சுற்றுலா மேற்கொள்ளும் நோக்கில் கடந்த 19 ஆம் திகதி அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது

இதற்கமைய, குறித்த பெண்ணுடன் இலங்கைக்கு வருகை தந்த ஏனைய சீனப் பிரஜைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, குறித்த பெண் இலங்கையில் சுற்றுலா மேற்கொண்ட பகுதிகளையும் ஆய்வுக்குட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.




கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட பெண்ணை வெளிநாட்டுப் பரிசோதனைகளுக்கு அனுப்ப தீர்மானம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு