பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (09) ஆரம்பமான இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பெத்தும் நிஸ்ஸங்க சதம் விளாசினார். இது, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் பெற்ற 4 ஆவது சதமாகும்.
11 நான்கு ஓட்டங்கள் ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.தற்போது 123 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வருகிறார்.
நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார். அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை 38.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 250 ஒட்டங்களைப் பெற்றுள்ளது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 182 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது
0 Comments
No Comments Here ..