நமீபிய வீரர் ஒருவர் சர்வதேச T20 போட்டிகளில் அதிவேகமாக சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். நமீபிய அணியின் இடது கை துடுப்பாட்ட வீரரான நிகோல் லோஃப்டி ஈடன் இந்த சாதனையை படைத்துள்ளார். நேபாளத்துக்கு எதிராக இன்று இடம்பெற்று வரும் போட்டியில் 33 பந்துகளில் சதம் விளாசி அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
8 ஆறு ஓட்டங்கள் மற்றும் 11 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.இதற்கு முன்னர் 34 பந்துகளில் சதமடித்து சாதனை படைந்திருந்த நேபாளத்தைச் சேர்ந்த குஷால் மல்லாவும் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
இந்தப் போட்டி தற்போது நேபாளத்தில் நடைபெற்று வருகிறது.
0 Comments
No Comments Here ..