20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

சுதந்திர தின ஒத்திகை நிகழ்வுகளை முன்னிட்டு கொழும்பின் சில வீதிகள் மூடப்படவுள்ளன

சுதந்திர தின ஒத்திகை நிகழ்வுகளை முன்னிட்டு கொழும்பின் சில வீதிகள் இன்றைய தினம் மூடப்படவுள்ளன.

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினம் நாளை சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்றைய தினம் இறுதிக் கட்ட ஒத்திகை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்த நிலையில், கொழும்பிலுள்ள சில வீதிகள் இன்று காலை 7.00 மணி முதல் மதியம் 12 மணிவரையில் மூடப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சுதந்திர மாவத்தை, வித்யா மாவத்தை,, மெட்லேன்ட் க்ரஸன்ட், மெட்லன்ட் பிளேஸ், சி.டபிள்யூ கண்ணங்கரா மாவத்தை, மார்கஸ் பெர்ணாண்டோ மாவத்தை, மன்றக்கல்லூரி வீதி, மற்றும் ஹோர்டன் சுற்றுவட்டம் வரையான விஜேராம வீதியும் மூடப்படவுள்ளன.

இதற்கமைய, போக்குவரத்திற்காக மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகள் மற்றும் பொதுமக்களிடம் காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது




சுதந்திர தின ஒத்திகை நிகழ்வுகளை முன்னிட்டு கொழும்பின் சில வீதிகள் மூடப்படவுள்ளன

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு