29,Apr 2024 (Mon)
  
CH
விளையாட்டு

இரட்டை சதத்தால் பெத்தும் நிஸ்ஸங்கவிற்கு கிடைத்த அங்கீகாரம்!

சர்வதேச கிரிக்கெட் பேரவை பிப்ரவரி மாதத்திற்கான உலகின் சிறந்த கிரிக்கெட் வீரரை தெரிவு செய்வதற்காக மூன்று சிறந்த வீரர்களை தேர்வு செய்துள்ளது. அவர்களில், சிறந்த வீரர் இணையவழி வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படவுள்ளார். இதன்படி, இவ்வருடம் பெப்ரவரி மாதம் இடம்பெற்ற மூன்று சிறந்த வீரர்களுக்கான பரிந்துரையில் இலங்கையின் பிரபல ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்கவும் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இரட்டை சதம் அடித்து சாதனை படைந்திருந்தமை இதற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளது. இதேவேளை, ஏனைய இரு வீரர்களாக இந்திய இளம் துடுப்பாட்ட வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் மற்றும் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.




இரட்டை சதத்தால் பெத்தும் நிஸ்ஸங்கவிற்கு கிடைத்த அங்கீகாரம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு