29,Apr 2024 (Mon)
  
CH
விளையாட்டு

RCB கனவை நனவாக்கிய மகளிர் அணி!

2024 மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் செம்பியன் பட்டத்தை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வென்றுள்ளது. 2024 மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் மகளிர் அணியை வீழ்த்தி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. டெல்லியில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற டெல்லி கெப்பிட்டல்ஸ் மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 18.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Shafali Verma அதிகபட்சமாக 44 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பில் Shreyanka Patil 04 விக்கெட்டுக்களையும், Sophie Molineux 03 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.


பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Ellyse Perry அதிகபட்சமாக 35 ஓட்டங்களை பெற்றதுடன், Sophie Devine 32 ஓட்டங்களையும் அணியின் தலைவி Smriti Mandhana 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இதன்படி ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இறுதி போட்டியில் வெற்றிபெறாத நிலையில், மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் அந்த வெற்றியை பதிவு செய்து கனவை நனவாக்கியுள்ளது ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி.





RCB கனவை நனவாக்கிய மகளிர் அணி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு