15,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

பொதுமக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி… மின் துண்டிப்பு இடைநிறுத்தம்..!!

மின் விநியோகத் துண்டிப்பு இடைநிறுத்தப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருட்களை வழங்குவதற்கு பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளதாகவும், அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கோரிக்கைக்கு அமைய இவ்வாறு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி மின்சார சபையினால் அறிவிக்கப்பட்டிருந்த மின் துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.நாளாந்த மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கிடைக்கப் பெறுவதனால் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியமில்லை என மின்சார சபை அறிவித்துள்ளது.

மின்சார சபைக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வழங்கி வந்த எரிபொருளுக்கான கொடுப்பனவுகள் செலுத்தாத காரணத்தினால் கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்திற்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டது.இதனால் கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் இன்று ஸ்தம்பிதம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




பொதுமக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி… மின் துண்டிப்பு இடைநிறுத்தம்..!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு