இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ், அடுத்த மாதம் வங்காளதேசத்திற்கு எதிரான தொடரில் விளையாட உள்ளார்.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏஞ்சலோ மேத்யூஸ் (Angelo Mathews) அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நீண்ட பதிவினை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "நான் விடைபெற வேண்டிய நேரமிது. கடந்த 17 ஆண்டுகளாக இலங்கைக்காக கிரிக்கெட் விளையாடியது எனது மிக உயர்ந்த மரியாதை மற்றும் பெருமை. நான் கிரிக்கெட்டிற்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளேன்.
கிரிக்கெட் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்து இன்று நான் இருக்கும் நபராக என்னை மாற்றியுள்ளது. டெஸ்ட் வடிவத்திற்கு நான் விடைபெறுகிறேன்.
தேர்வாளர்களுடன் கலந்துரையாடப்பட்டபடி, என் நாட்டிற்கு நான் தேவைப்பட்டால், வெள்ளை பந்து வடிவத்திற்கான தேர்வுக்கு நான் தொடர்ந்து இருப்பேன்" என கூறியுள்ளார்.
0 Comments
No Comments Here ..