ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி பஞ்சாப் அணியைச் சேர்ந்த நியூசிலாந்து நாட்டு வீரர் கைல் ஜேமிசன் கவனம் பெற்றுள்ளார். அவர் கைப்பற்றிய பிலிப்ஸ் சால்ட் மற்றும் கேப்டன் ரஜத் பட்டிதார் விக்கெட்டுகள் மூலம் ஆர்.சி.பி அணி தடுமாறியது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பௌலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து ஆர்.சி.பி அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். அந்த அணியின் பிலிப்ஸ் சால்ட் 9 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்தபோது ஜேமிசன் வீசிய பந்தில் ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதேபோன்று ஆர்.சி.பி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தபோது ஜேமிசன் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ. என்ற முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
0 Comments
No Comments Here ..