20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

மத்தள விமான நிலையம் – புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

மத்தள விமான நிலையத்தை சர்வதேச விமானங்கள் வருகை தரும் விமான நிலையமாக மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இதற்காக குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத் திட்டத்திற்கு உரிய பிரிவினரின் ஒத்துழைப்பை பெறுவது தொடர்பாக சகல விமான நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார். அத்தோடு சர்வதேச விமான நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாக சந்திர ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கரை வருட காலப்பகுதியில் மத்தள விமான நிலையத்தின் மீது உரிய கவனம் செலுத்தப்படவில்லையென சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் விமான சேவைகள் அமைச்சரின் வழிகாட்டலின் கீழ் இந்த விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.





மத்தள விமான நிலையம் – புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு