20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

கொரோனா வைரஸ் தாக்கம்: இலங்கையில் இருவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை!


கொவிட்-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதான சந்தேகத்தில் நாட்டில் இருவர் மாத்திரமே வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒருவர் குருநாகல் பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் அதேவேளை, மற்றையவர் ஐ.டி.எச். எனப்படும் தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் சிகிச்சையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்துள்ள சீனப் பெண் தொடர்ந்தும் ஐ.டி.எச். வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொவிட்-19 தொற்று தொடர்பாக இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு நாளை கூடவுள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.





கொரோனா வைரஸ் தாக்கம்: இலங்கையில் இருவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு