18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகிறார் சீனப் பெண்!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த சீனப் பெண், அந்த வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட உள்ளார். 

குறித்த பெண் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ள நிலையில்,தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையிலிருந்து அவர் இன்றைய தினம் வெளியேற்றப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  

சீனாவிலிருந்து சுற்றுலாவை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த அந்தப் சீனப் பெண்,கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை கடந்த மாதம் 27 ஆம் திகதி உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து, 43 வயதான குறித்த சீனப் பெண், அங்கொடையில் அமைந்துள்ள தேசிய தொற்றுநோய்வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.  

இந்த நிலையில், இந்த மாத ஆரம்பத்தில், குறித்த பெண்ணை வைத்தியசாலையில் இருந்துவெளியேற்ற முடியும் என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார். இதற்கமையவே, இன்று அவர் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படஉள்ளமை குறிப்பிடத்தக்கது.   




வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகிறார் சீனப் பெண்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு