18,Jun 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

பங்களாதேஷ் கடற்பரப்பில் 27 இலங்கை மீனவர்கள் கைது!

பங்களாதேஷ் கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 27 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, பங்களாதேஷ் பாதுகாப்பு பிரிவினரால் மீனவர்களின் 4 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹிக்கடுவ, பெரேலிய உள்ளிட்ட சில பகுதிகளிலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் மீனவர்களை விடுதலை செய்து மீண்டும் அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மீனவர்களின் உறவினர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.





பங்களாதேஷ் கடற்பரப்பில் 27 இலங்கை மீனவர்கள் கைது!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு