கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று நீர்விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
இன்று முற்பகல் 09 மணி முதல் இந்த நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.
முற்பகல் 9 மணிக்கு ஆரம்பித்து நாளை அதிகாலை வரை 18 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கூறுகின்றது.
மாபோல,மஹபாகே,கெரவலப்பிட்டிய,வெலிசர,ஏகல,ஜாஎல,சீதுவை,கட்டுநாயக்க உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.













0 Comments
No Comments Here ..