பங்களாதேஷில் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 24 பேரும், சிட்டகொங் பெருநகர நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
பங்களாதேஷ் கடற்பரப்புக்குள்அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர்கள், பங்களாதேஷின் கடற்கரை பிரதேசமானசட்டோக்ரம் (Chattogram) பகுதியில் வைத்து கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த இலங்கைமீனவர்களிடம் இருந்து நான்கு மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பங்களாதேஷ்காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
பங்களாதேஷ் கடற்படையினரால்கைது செய்யப்பட்ட 24 இலங்கை மீனவர்களும் பட்டேங்கா காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டபின்னர், சட்டோக்ரம் (Chattogram) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்துஅவர்கள் அனைவரும் தற்போது சிட்டகொங் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். குறித்த இலங்கைமீனவர்கள் தொடர்பில், பங்களாதேஷில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் இணைந்து உன்னிப்பாகஅவதானித்து வருவதாக, இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில்,இலங்கை வெளியுறவு அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வினவியபோதே, இந்த விடயத்தைஅந்த அமைச்சு எமது கெப்பிட்டல் செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தது
24 இலங்கை மீனவர்களும்சிட்டகொங் பெருநகர நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அதுதொடர்பான தகவல்களைப் பெற்று மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் இலங்கை வெளியுறவுஅமைச்சு குறிப்பிட்டுள்ளது.இதேவேளை,
குறித்த மீனவர்களைஇலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க உள்ளதாக வெளியுறவுஅமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..