யாழ்ப்பாணம் வண்ணாா்பண்ணை மற்றும் கொக்குவில் மேற்கு ஆகிய பகுதிகளின் 3 இடங்களில், வாள்வெட்டு குழுவொன்றினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த வாள்வெட்டு குழுவினால் கடையொன்று சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகங்களை மூடியும், இலக்க தகடுகளற்ற இரண்டு மோட்டாா் சைக்கிள்களில் வந்த 5 போ் கொண்ட குழுவொன்றே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தொடா் தாக்குதலை நடாத்தியவர்களை கைது செய்யும் நடவடிக்கையினை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.













0 Comments
No Comments Here ..