18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நான்கு வர்ததமானி அறிவித்தல்கள் வெளியீடு

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நான்கு வர்ததமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னபிரியவின் கையொப்பத்துடன், நேற்றிரவு இந்த வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்தலின் ஊடாக தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, சுயாதீனக் குழுக்கள் செலுத்த வேண்டிய கட்டுப்பணம் மற்றும் அரசியற் கட்சி அல்லது சுயாதீனக் குழுக்களின் ஊடாக வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான எண்ணிக்கை என்பன, ஒரு வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அத்துடன், வாக்களிப்பதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற விடயங்கள், மற்றுமொரு வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும், நான்கு மாவட்டங்களுக்கு, உறுப்பினர்களை தெரிவு செய்யும் எண்ணிக்கையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது




எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நான்கு வர்ததமானி அறிவித்தல்கள் வெளியீடு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு