எதிர்வரும் தேர்தலில் மக்கள் நலனை மையமாக கொண்டு செயற்பட கூடிய தகுதியானவர்களை பொதுமக்கள் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பவேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஊடகப் பிரதானிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரச நிறுவனங்களுக்கு இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுவது குறித்து ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
இதன்போது கடந்த அரசாங்கத்திலேயே இராணுவத்தினர் அதிகமாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும், அது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதிலளித்துள்ளார்.













0 Comments
No Comments Here ..