முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தரப்பினரை தனித்தனியாக சந்தித்து இறுதித் தீர்மானமொன்றை மேற்கொள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்துள்ளார்.
அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய முன்னணிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக கட்சியை இரண்டாக பிளவுபடுத்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், ரணில் அணியினர் மற்றும் சஜித் பிரேமதாச அணியினரை சபாநாயகர் கரு ஜயசூரிய தொடர்ச்சியாக சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்று மற்றும் அதற்கு முன்தினம் சஜித் மற்றும் ரணில் தரப்பை தனித்தனியே சந்தித்து சபாநாயகர் கரு ஜயசூரிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் சஜித் தரப்பையும் ரணில் தரப்பையும் தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இரண்டு தலைவர்களுக்கும் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளார்.
0 Comments
No Comments Here ..