தமது வாடிக்கையாளர்கள் பணம் பெற வசதியாக சில வணிக வங்கிகள் ஏரிஎம் கருவிகள் பொருத்திய வாகனங்களை தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்தி வருகின்றன.
ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வாடிக்கையாள் வசிக்கும் இடங்களுக்கே சென்று, ஏரிஎம் இயந்திரங்கள் மூலம் பணப் பரிமாற்றம் செய்ய இடமளிப்பது இதன் நோக்கமாகும்.
ஹற்றன் நஷனல் வங்கி, கொமர்ஷல் வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி போன்ற வங்கிகள் இன்று கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் ஏஎரிஎம் ரோந்துச் சேவையை நடத்துகின்றன. வாகனங்கள் செல்லும் இடங்கள், நேரங்கள் பற்றிய விபரங்களை வங்கிகளின் இணையத்தளங்களில் அறியலாம்.
0 Comments
No Comments Here ..