இலங்கை மின்சார மற்றும் பொறிமுறை இயந்திர படையணியின் லான்ஸ் கோப்ரல் லு.பிரியதர்ஷன அபேகோன் நேற்று முன்தினம் ஜேர்மனி சவோனாவில் நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுனர் போட்டியின் 100 மீட்டர் தடகளக் போட்டியில் கலந்துகொண்டு 10.15 வினாடிகள் ஓடி புதிய தெற்காசிய சாதனை படைத்துள்ளார்.
2015 ஆம் ஆண்டில் தென் கொரியாவில் நடைபெற்ற 7 ஆவது உலக பாதுகாப்பு சேவைகள் தடகளக் போட்டியின் 4 ஒ 400 மீட்டர் ரிலே போட்டியில் கலந்துகொண்ட லான்ஸ் கோப்ரல் லு.பிரியதர்ஷன அபேகோன் ஒரு வெண்கலப் பதக்கத்தை பெற்று இலங்கைக்கு பொருமையை சேர்த்த்தோடு, தேசிய தடகளக் மற்றும் இராணுவ தடகளத்தில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் இராணுவ தடகளக் குழுவின் தலைவரும், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க ஆகியோர் அவரது திறமைகளை மேம்படுத்துவதற்கும், ஜெர்மனிக்குச் சென்று போட்டியில் பங்கேற்பதற்காகவும் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்கினர்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..