இந்தியாவில் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் நடைபெறுவது குறித்து தகவல் வெளியாகி வரும் நிலையில், அது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் நிர்வாக இயக்குனரான ஆஷ்லே கைல்ஸ் கூறுகையில், பாதியில் நின்று போன ஐபிஎல் போட்டிகள் எங்கே எப்போது நடக்கும் என்று யாருக்கும் எதுவும் தெரியாது.
ஆனால் அப்போட்டிகளை, செப்டம்பர் மாத இறுதியிலும் மற்றும் நவம்பர் மாத இடையிலும் நடத்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஒருவேளை ஐபிஎல் போட்டிகள் இந்த காலப்பகுதியல் நடைபெற்றால் இங்கிலாந்து வீரர்கள் யாரும் அத்தொடரில் கலந்து கொள்ள மாட்டார்கள்.
0 Comments
No Comments Here ..