வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கை அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் வங்கதேச அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, நேற்று நடைபெற்றது.
அதன் படி டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணிக்கு துவக்க வீரர்களாக, தனுஷ்கா குணதிலகா-குசால் பெரேரா களமிறங்கினர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 81 ஓட்டங்கள் குவித்த நிலையில், தனுஷ்கா குணதிலகா 39 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினார். அதன் பின் வந்த பதும் நிஷன்கா நான்கு பந்துகளில் ஒரு ஓட்டம் கூட எதுவும் எடுக்காமல் அவுட் ஆக, குசால் மெண்டிஸ் 22 ஓட்டங்களில் வெளியேற, மற்றொரு துவக்க வீரரான குசல் பெரேரா, தனஞ்சய டி செல்வாவுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
0 Comments
No Comments Here ..