07,Apr 2025 (Mon)
  
CH
இலங்கை செய்தி

வீடொன்றினுள் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள்!

வெல்லவாய பகுதி வீடொன்றிலிருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்லபாவ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே இளம் தம்பதியினரின் சடலம் நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


36 வயதுடைய கணவர் மற்றும் 21 வயதுடைய மனைவியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்படுகின்றது.


வீட்டின் படுக்கை அறையில் இருந்து குறித்த நபர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரணத்திற்கான காரணம் இது வரை தெரியவரவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.








வீடொன்றினுள் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு