17,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

யாழ். கொக்குவிலில் வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம்! - பெறுமதியான பொருட்கள் சேதம்

யாழ். கொக்குவில் மேற்கில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, அங்கு இருந்த பெறுமதியான பொருட்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது.


இந்தச் சம்பவம் இன்று (29) பிற்பகல் இடம்பெற்றது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


6 மோட்டார் சைக்கிள்களில் வாள், இரும்புக் கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 9 பேர் கொண்ட கும்பல் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து பெறுமதியான தளபாடங்களை அடித்துடைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது.


வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த வன்முறைக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டுள்ளது எனப் பொலிஸார் கூறியுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் கொக்குவில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





யாழ். கொக்குவிலில் வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம்! - பெறுமதியான பொருட்கள் சேதம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு