யூரோ கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் ஜேர்மனி தோல்வியடைந்ததால், குழந்தை ஒருவர் கண்கலங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்று நடைபெற்ற யூரோ கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில், இங்கிலாந்து-ஜேர்மனி அணிகள் மோதின. இப்போட்டி இங்கிலாந்தில் இருக்கும் விம்பிலியில் நடைபெற்றது.
இதன் மூலம் இங்கிலாந்து கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியை மைதானத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த குழந்தை, ஜேர்மனியின் தோல்வியை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.
அப்போது அவர் அருகில் இருந்த நபர் அவரை கட்டியணைத்து தேற்றினார். இருப்பினும், அக்குழந்தை இந்த தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் கண்கலங்கினார்.
0 Comments
No Comments Here ..