கொரோனா தொற்றுநோயால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு கடந்த காலங்களில் அரசு வழங்கிய 5,000 ரூபாய் கொடுப்பனவில் பல முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் நடத்திய தணிக்கை விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவு தொகையை விட அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பிரதேச செயலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் காரணமாக இழந்த பணத்தை அரசாங்கம் மீட்டெடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தை தவிர அனைத்து மாகாணங்களிலும் தணிக்கை குழுவால் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விரிவான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..