கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆனையிறவு பகுதியில் இன்று(15) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.
ஆனையிறவு ஏ9 வீதியின் வளைவு ஒன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ் நோக்கி வருகை தந்து கொண்டிருந்த கப்ரக வாகனத்தின் மீது, கிளிநொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் மோதியுள்ளது.
சம்பவத்தில் ஏ9வீதியை கடந்து டிப்பர் ரக வாகனம் குடை சாய்ந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..