முழு உடல் அழகு பெற பல செயற்கை முறைகளை பயன்படுத்தி உள்ளோம் ஆனால் அது நமக்கு முழுமையான பலனை தந்ததில்லை.
அதற்கு பதிலாக பல பிரச்சனைகள் வந்து நம் அழகை கெடுத்து, மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இயற்கை முறையில் முழு உடல் அழகு பெற பல அழகு குறிப்புகள் உள்ளது.
அவற்றை பின்பற்றி வந்தாலே போதும் உடல் முழுவதும் நம் அழகை அதிகரிக்க முடியும்.
நகங்களை பராமரிக்க:-
தினமும் பாலுடன் கொஞ்சம் பேரிச்சை கலந்து குடித்து வர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, நகம் உடைத்தல் குறையும். மேலும் நகத்திற்கு பாதாம் எண்ணெயை தடவி வர நகம் பளப்பளப்பாக இருக்கும்.
நகங்களை பராமரிக்க ஒரு சிறந்த அழகு குறிப்பு இதுவே.
இதழ்களை பராமரிக்க:-
நம் வீட்டில் பொதுவாக சமைப்பதற்கு பீட்ருட் அதிகம் வாங்குவோம். அந்த பீட்ருடை ஒரு துண்டு எடுத்து உங்கள் உதட்டில் லிப்ஸ்டிக் போடுவது போல் போட்டு வந்தாலே போதும். உங்கள் உதடு மிகவும் அழகாக இருக்கும்.
இதழ்களை பராமரிக்க ஒரு சிறந்த அழகு குறிப்பு இதுவே.
முகம் அழகு குறிப்பு
தினமும் பப்பாளிப் பழத்தை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ, முகம் பொலிவுடனும். பளப்பளப்பாகவும் இருக்கும்.
முழு உடல் அழகு பெற முட்டைக்கோஸ் சாறை முகத்தில் தடவி வர முகச் சுருருக்கம் மறையும்.
கழுத்தை பராமரிக்க:-
கழுத்தை பராமரிக்க சிறிதளவு ரோஸ் வாட்டர், சிறிதளவு வெங்காய சாறு இரண்டு சொட்டு ஆலிவு ஆயில் மற்றும் பயத்த மாவு ஆகியவற்றை கலந்து கழுத்தில் தடவி ஒரு பத்து நிமிடம் கழுத்திலிருந்து தாடையை நோக்கி லேசாக மசாஜ் செய்துவிடுங்கள்.
இவ்வாறு தொடர்ந்து செய்ய நாளடைவில் உங்கள் கழுத்து பகுதியில் இருக்கும் கருப்பு நிறம் மாறி பளப்பளப்பாக காணப்படும்.
கழுத்தை பராமரிக்க ஒரு சிறந்த அழகு குறிப்பு இதுவே.
சருமத்தை பாதுகாக்க:-
ஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன், முட்டைகோசின் இலையில் சாறு எடுத்து கலந்துகொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வர சூரிய ஒளியால் கருமை அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும். முன்பு இருந்ததைவிட சருமத்தில் நிறம் சிவப்பாக காட்சியளிக்கும்.
உடல் அழகு பெற தினமும் அவரி இலையை சுத்தம் செய்து நன்கு உலர்த்தி தூளாக்கி தினமும் 5 கிராம் காலை உணவிற்குப் பின் சாப்பிட்டு வந்தால் உடல் பளபளப்பாக இருக்கும்.
கண்களில் கருவளையம் நீங்க:-
கண்களில் இருக்கும் கருவளையம் நீங்க இது தான் சிறந்த வழி. வெள்ளரிக்காய் விதையை காயவைத்து பொடி செய்து அதில் தயிர் சேர்த்து பசைபோல் ஆக்கவும். இந்த பேஸ்டை முகத்தில் தொடர்ந்து போட்டு வர முப்பது நாட்களில் கண்களில் இருக்கும் கருவளையம் மறைந்து காணப்படும்.
கருப்பு திட்டுகளை நீக்க:-
சிலருக்கு முகத்தில், மூக்கில், கண்ணங்கள் என அசிங்கமாக கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இதை கிராம புறத்தில் “மங்கு” என குறிப்பிடுவார்கள்.
இவற்றைப் போக்க, ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர் கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.
அரைத்த பற்றை முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் பசைப்போல தடவுங்கள். சில முறை இந்த முறையை நீங்கள் கையாண்டால் போதும் முகத்தில் உள்ள அசிங்கமான மங்கு(கருந்திட்டு)மறைந்துவிடும்.
இந்த டிப்ஸ்ஸை தினமும் பாலோ பண்ணிங்கனா முழு உடல் அழகு பெறும்.
0 Comments
No Comments Here ..