03,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில்

தலவாக்கலை, கிரேட் வெஸ்டன் மலை உச்சிக்கு ஆய்வுக்காக சென்ற றுகுணு பல்கலைகழக மாணவர்கள் 9 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி லிந்துளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (16) மாலை இடம்பெற்றதாகவும் குளவி கொட்டுக்கு இலக்காகி காயங்களுக்கு உள்ளான மாணவர்களை 1990 என்ற அவசர நோயாளி வண்டியின் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோரில் 3 பேர் சிகிச்சை பெற்று திரும்பியதோடு, ஏனைய 6 பேர் தொடர்ந்தும் லிந்துளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.




பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு