16,Jul 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

நாடு முழுவதும் மின்வெட்டு! தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்!

சுழற்சி முறையில் இன்றைய தினமும் சுமார் 5 மணித்தியாலங்கள் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே 5 மணித்தியால மின்விநியோக துண்டிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்றைய தினம் A,B மற்றும் C ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு 4 மணித்தியாலமும் 40 நிமிடமும் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும்.

ஏனைய வலயங்களுக்குள் உள்ளடங்கும் பிரதேசங்களில் 4 மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும்.

கொழும்பு 01 தொடக்கம் கொழும்பு 15 வரையான பிரதேசங்களிலும் சுழற்சி முறையில் இன்று முதல் மின்விநியோகத்தை துண்டிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.





நாடு முழுவதும் மின்வெட்டு! தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு