14,May 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

வட்டுக்கோட்டையில் விபத்து - இருவர் படுகாயம்

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அத்தியடி பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

கார் ஒன்றினை முந்திச் சென்ற வேளை எதிரே வந்த பேருந்துடன் மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த அராலியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த பேருந்தின் சாரதி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





வட்டுக்கோட்டையில் விபத்து - இருவர் படுகாயம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு