முத்துரஜவெல - சரணாலயப் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் மே மாதம் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்ற நீதிபதி சிசிர டி அபேவ் தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு தீர்மானித்துள்ளது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வரை, சரணாலயப் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதற்கு, இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு, முத்துரஜவெல பகுதியைச் சேர்ந்த 35 குடியிருப்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.













0 Comments
No Comments Here ..