16,May 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

கதிர்காமத்திற்கு யாத்திரை மேற்கொண்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு

யாழ் சந்நதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமத்திற்கு  பாதயாத்தரை மேற்கொண்டு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை சென்றடைந்த யாத்தீரிகர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (29) ஆலயத்தில் உயிரிழந்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.


யாழ்ப்பாணம் கைதடி மத்திய வீதியைச் சேர்ந்த 74 வயதுடைய இராசையா சிவலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி கதிர்காமத்துக்கான பாதயாத்திரையை யாழ் சந்நதி முருகன் ஆலயத்தில் ஆரம்பித்த பாதையாத்திரை குழுவில் பங்கேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இரவு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்து ஆலய வளாகத்தில் தங்கியிருந்துள்ளனர்.


இந்நிலையில், திங்கட்கிழமை காலையில் குறித்த நபர் பணிஸ் உண்ட பின்னார் அமர்ந்திருந்த நிலையில் திடீரென நிலத்தில் சரிந்து வீழ்ந்ததையடுத்து அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



இதனையடுத்து, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தவைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 




கதிர்காமத்திற்கு யாத்திரை மேற்கொண்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு