இரண்டரை வருடகால ஒப்பந்தத்தில் அல் நாசர் கழகத்தில் கடந்த ஜனவரியில் ரொனால்டோ இணைந்தார். இந்த ஒப்பந்தத்தின் பெறுமதி 200 மில்லியன் யூரோ என செய்திகள் வெளியாகின.
சவூதி ப்ரோ லீக் ப்ரோ லீக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட்டிலிருந்து நடைபெற்ற நிலையில், ஜனவரியில் இணைந்த ரொனால்டோ அல் நாசர் சார்பில் 16 போட்டிகளில் 14 கோல்களைப் புகுத்தினார். எனினும் அக்கழகம் இரண்டாமிடத்தையே பெற்றது. அல் இத்திஹாத் கழகம் சம்பியனாகியது.
இந்நிலையில் அல் நாசர் கழகத்திலிருந்து 38 வயதான ரொனால்டோ விலகக்கூடும் என செய்திகள் வெளியாகின. மீண்டும் ஐரோப்பிய கழகமொன்றில் அவர் இணையக்கூடும் எனக் கூறப்பட்டது. அத்துடன் லயனல் மெஸி மற்றும் கரீம் பென்ஸிமா ஆகியோர் சவூதி அரேபியா கழகங்களில் விளையாடுவதை தான் வரவேற்பதாகவும் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
சவூதி ப்ரோ லீக்கின் உத்தியோகபூர்வ சமூக ஊடகத்தளங்களுக்கு அளித்த செவ்வியின்போது இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ரொனால்டோ கூறுகையில்,
'நான் இங்கு நீடிக்க விரும்புகிறேன்.
இங்கு தொடர்ந்து விளையாடுவேன். அடுத்த பருவக்காலத்தில் நாம் மேலும் சிறப்பாக இருப்போம். கடந்த 5, 6 மாதங்களில் முன்னேறியுள்ளோம். விரைவில் நாம் சம்பியன் பட்டங்களை வெல்ல முடியும் என நம்புகிறேன்' எனக்கூறியுள்ளார்
0 Comments
No Comments Here ..