இந்த சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - கொழும்பு, வாகனேரி பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை (12) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர் ஓட்டமாவடி - காவத்தமுனை ஹிஸ்புல்லாஹ் வீதியைச் சேர்ந்த ஏ.நஸீர் எனும் மாற்றுத்திறனாளி நபர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
படுகாயங்களுக்குள்ளான நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
மர்மமாமன முறையில் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..